மலை மீதொரு குளம்

பிம்பங்கள் தாங்கும்
சிறு குளம் ஒன்று
பித்தனாகிப் போன
நான் கண்டேன் இன்று
ஒய்யாரமாய், மலை மீது
ஒரு ஓரமாய்
திவ்யமாய், கருத்துக்களின்
கருவூலமாய்
கலக்கங்கள் இருந்தும்
கண்ணியம் குறையாமல்
விளக்கங்கள் பொருந்தும்
வைராக்கியம் மறையாமல்
இலை முதல் மலை வரை
மலர் முதல் மேகம் வரை
மொத்தமும் அடக்கி
பிள்ளையுறங்கும் தொட்டிலாய்
எல்லையில்லா ஆசைகளை
என்னுள்ளே துவக்கி
ஏந்திய பிம்பங்கள் வழியே
வேண்டிய மெய்யான மெய்களை
உள்ளங்கையில் வைத்தனுப்பி
அது சொன்னது சித்தாந்தமா
வாழ்வின் பாதையில்
பின் அது தான் தோன்றுமா!

Leave a comment